சிங்கப்பூர் முழுவதும் லாரி ஓட்டுனர்கள் மீதான அதிரடி சோதனை நடவடிக்கை நடந்தது.
கடந்த ஜூன் 9 முதல் 10 வரை இரண்டு நாள் நடந்த இந்த சோதனை நடவடிக்கையை போக்குவரத்து காவல்துறை (TP) நடத்தியது.
தவறுக்கு இணங்காத பணிப்பெண்ணை பெல்டால் அடித்து காயப்படுத்திய ஆடவர்
தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த இந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது, சோதனைகளுக்காக மொத்தம் 56 லாரிகள் நிறுத்தப்பட்டன.
மேலும் லாரி ஓட்டுநர்களிடம் 32 போக்குவரத்து மீறல்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் 17 வேகக் கட்டுப்பாட்டை மீறி ஓட்டுனர்கள் செயல்பட்ட குற்றங்களும் அடங்கும்.
இதில், வாகனம் ஓட்டும்போது மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தியது மற்றும் சீட் பெல்ட் அணியத் தவறியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டன.
“Speed limiters” கருவிகளை முன்கூட்டியே பொருந்துமாறு தகுதியுள்ள அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனால் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் குற்றங்கள் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டது.
இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு
வரம்பை மீறி வேகமாக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது S$1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் அதே தவறை செய்பவர்களுக்கு S$2,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அடுத்த ஆண்டு 2026 தொடக்கத்திற்குள் லாரிகளில் கட்டாய வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த வேண்டும். ஆனால் 10 சதவீதத்திற்கும் குறைவான லாரிகள் மட்டுமே அவ்வாறு செய்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் குறித்த முழு விவரம்:
TOP Photo: Police.gov.sg/website

