சிங்கப்பூர் – மலேசியா இடையே இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) முதல் மீண்டும் பயணங்களை தொடங்கவுள்ளதாக “ஏரோலைன்” நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல விரைவுப் பேருந்து சேவை நிறுவனமான ஏரோலைன், கடந்த நவம்பர் 6 முதல் 1 மாதங்களுக்கு பயணங்களை நிறுத்த வேண்டும் என மலேசிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சிங்கப்பூர் வந்து செல்லும் 2 விமானங்கள் ரத்து – ஸ்கூட் (Scoot) அறிவிப்பு
பேருந்து நிறுவனம், பயணிகளை மத்திய பேருந்து முனையத்தில் இறக்கிவிடுவதற்கு பதிலாக அதற்கு ஏதுவான சொந்த இடங்களில் இறக்கிவிட்டதை தொடர்ந்து இதன் சேவைக்கு மலேசியாவின் நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் தடை விதித்தது.
இந்நிலையில், தடை காலத்திற்கு முன்பாகவே பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் சேவைகளை அங்கீகரிக்கப்பட்ட முனையத்திற்கு மாற்றுமாறும் பேருந்து நிறுவனத்துக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
ஆதரவு வழங்கிய பயணிகளுக்கும் அந்நிறுவனம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது.
ஏரோலைன், பினாங்கு மற்றும் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்கு சேவைகளை வழங்குகிறது.

