SINGAPORE TOTO: சிங்கப்பூர் டோட்டோவில் ஜாக்பாட் முதல் பரிசு மீண்டும் S$2,500,000 என்ற இலக்கை தொடும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 17 கோடி ஆகும்.
நாளை (ஆக.21) வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு இந்த குலுக்கல் நடைபெறும் என்றும் Singapore Pools கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா?
கடைசியாக நடந்த மூன்று குலுக்களிலும் “குரூப் 1” பரிசை யாரும் வெல்லவில்லை, எனவே இந்த பரிசுத் தொகை தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஆக.18, அன்று நடந்த குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்றாலும், இரண்டாம் பரிசை இருவர் வென்றனர், அதாவது தலா S$132,518 வெள்ளியை அவர்கள் பரிசாக பெற்றனர்.
அதன் வெற்றி எண்கள் 1, 4, 18, 24, 37, 42 மற்றும் கூடுதல் எண் 26 ஆகும்.
சிங்கப்பூர் தேசிய தின சிறப்பு TOTO குலுக்கலில் அதிஷ்டசாலி நபர் ஒருவர் சுமார் S$5.5 மில்லியன் பரிசை தட்டித் தூக்கினார்.
இதற்கு முன்னர் கடந்த ஜூலை 31 இல் நடந்த ஜாக்பாட் குலுக்கலில் குரூப் 1 பரிசான சுமார் S$12.83 மில்லியன் தொகையை ஒரே ஒருவர் தட்டித் தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
தேசிய தின சிறப்பு TOTO: இந்திய மதிப்பில் 37 கோடி – வென்று மாஸ் காட்டிய அதிஷ்டசாலி நபர்!

