பதவி உயர்வு நிகழ்ச்சியில் சுமார் 6,402 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவ்வாறு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதன் மூலம் அனுபவமிக்க அதிகாரிகளின் திறமை மற்றும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 135 அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அவர்களில் சில விழுக்காட்டினரை சீருடை சேவைத்துறை புதிய வேலைகளுக்கு மாற உதவி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டில் ஓய்வு வயது 64 ஆக உயர்த்தப்படும். 2030-ஆம் ஆண்டில் அது 65 ஆக உயர்த்தப்படும்.
சிங்கப்பூர் மக்கள் சீருடை சேவை அதிகாரிகளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறினார்.
குடிநுழைவு சோதனை சாவடி அதிகாரி செந்தாமரை வையத்தியலிங்கம்(53) துணை உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.அவர் ஓய்வு உயர்வு மாற்றத்தை தான் வரவேற்பதாக கூறினார்.

