இது குறித்து சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் தலைவர் ஓங் எங் ஹுவாட் கூறியதாவது, “தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான சைவ உணவுகளை வழங்கும் அதன் பாரம்பரியத்திற்கு உண்மையாக இருக்கும் ஆனந்த் பவன் உணவகத்திற்கு இந்த விருதை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் “என்று கூறினார்.
உணவகத்தின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்த விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த உணவகம் தற்போது மூன்று தலைமுறையாக செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் சையட் அல்வி சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இயந்திர மனித கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

