சிங்கப்பூர்: கிளெமென்டி அவென்யூ 1ல் 46 வயதுமிக்க ஆடவர் ஒருவர் ஆடை*யின்றி சுற்றித்திரிந்ததாகவும், பின்னர் போலீசார் அவரை மடக்கி பிடித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) அது தொடர்பான காணொளியை கேமராவில் படம்பிடித்த ஒருவர் அதனை மதர்ஷிப்புடன் பகிர்ந்து கொண்டார்.
சிங்கப்பூரில் 23 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்: சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட உடல்
படம்பிடித்தவர் கூறுகையில்; அன்று மாலை 5:45 மணியளவில் கிளெமென்டி அவென்யூ 1 இல் அமைந்துள்ள நான் ஹுவா உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே அந்த ஆடவர் நடந்து சென்று கொண்டிருந்ததாக சொன்னார்.
அதனை அடுத்து, உதவி வேண்டி அன்று மாலை சுமார் 5:30 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் காவல் படை உறுதிப்படுத்தியது.
அதன் பின்னர் அந்த ஆடவர் மனநல பாதுகாப்பு சட்டம் 2008ன் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவருக்கும், அவரால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
வேலையில் மிகுந்த மன அழுத்தம்… பெண்ணைத் தாக்கி அட்டூழியம் – நீதிமன்றத்தில் ஆஜர்

மனநலம் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால்..
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரேனும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், உதவி அல்லது ஆலோசனை பெற சில அவரச உதவி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
SOS 24-மணி நேர அவரச உதவி எண்: 1-767
சிங்கப்பூர் மனநல பாதுகாப்பு அமைப்பு: 1800-283-7019
மனநல பாதுகாப்பு நிறுவனம்: 6389-2222 (24 மணிநேரம்)
ஆரம்ப பள்ளி வயது குழந்தைகளுக்கு: 1800-274-4788
SHECARES@SCWO: தொடர்புக்கு = 8001-01-4616 அல்லது வாட்ஸ்அப்: 65714400 (இணைய வழி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு)

