சிங்கப்பூர்: பயங்கரவாதிகள் தொடர்ந்து சிங்கப்பூரை குறி வைப்பதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் கூறியுள்ளார்.
மலேசியாவில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் மற்றும் சிலர் கைதானது போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான சம்பவங்களால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.
மேலும் சிவில் சர்வீஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மலேசியாவும் சிங்கப்பூரும் அடுத்தடுத்து இருப்பதால், ஜோகூர் பாலத்தைத் தாண்டி எது நடந்தாலும் அது சிங்கப்பூரைப் பாதிக்கும் என்றார்.

