சிங்கப்பூரில் மரினா சௌத் பியர் பகுதியில் ஜூன் 18-ஆம் தேதி முக்குளிப்புப் படகை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட போது அதன் இயந்திரம் ஒன்றில் சிக்கி 22 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
அவர் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு பிற்பகல் 2 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது.
அவரை மீட்டு சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமான மரணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மனிதவள அமைச்சகம் இந்த ஊழியரின் மரணம் குறித்த சம்பவத்தை விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு மனிதவள அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Follow us on : click here
The post சிங்கப்பூரில் வேலையிடத்தில் வெளிநாட்டவர் மரணம்!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin