சிங்கப்பூர்: தனக்கென ஒரு சொந்தமான வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. சிலர் தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் வீடுகளை கட்டுவதும் வாங்குவதும் உண்டு. வீட்டை கட்டும்போது ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து கட்டுவார்கள். அதுவே கட்டிய வீட்டை வாங்குபவர்கள் என்றால் தனக்கு பிடித்தது போல் இருக்கிறதா.. வீட்டில் எல்லா வசதிகளும் உள்ளதா.. என்று பார்ப்பவர்கள் உண்டு. இப்படி வீட்டை பற்றி கனவு காண்பவர்கள் உண்டு.
சிங்கப்பூரில் தற்போது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு மறுவிற்பனை வீட்டின் விலையானது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் மறு விற்பனை வீடுகளின் தேவை அதிகரிப்பு.
சிங்கப்பூரில் BTO எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளும், மற்ற வீடுகளும் கிடைக்காத பட்சத்தில் அனைவரும் மறுவிற்பனை வீட்டையே வாங்க விரும்புகிறார்கள். மறு விற்பனை வீடுகளின் தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விலையானது மூன்று முதல் நான்கு விழுக்காடு வரை அதிகரிக்கூடும்.

