சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதியவர்கள் பயனடையும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம்தான் medisave மருத்துவ சேமிப்பு திட்டம்.
மூத்த தலைமுறையைச் சேர்ந்த சுமார் 300,000 க்கும் மேற்பட்ட தகுதியான முதியவர்கள் MediSave மருத்துவச் சேமிப்பு திட்டத்திற்காக 150 மில்லியன் வெள்ளிக்கு மேல் மருத்துவ சேமிப்பு நிரப்பும் தொகை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மெடிஷீல்டு லைஃப், கேர்ஷீல்டு லைஃப், எல்டர்ஷீல்டுக்கான மருத்துவக் காப்பீட்டுச் சந்தாக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று கூறப்பட்டது.

