சிங்கப்பூரில் புக்கிட் மேரா பகுதியில் புறாக்களுக்கு மீண்டும் மீண்டும் உணவளித்த குற்றத்திற்காக சிங்கப்பூர் பெண்மணி ஒருவருக்கு S$4,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பலமுறை எச்சரிக்கை வழங்கப்பட்டு, மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்ந்து புறாக்களுக்கு உணவளித்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வந்த விமானத்தில் பணிப்பெண்ணை கழிவறையில் தள்ளி சீண்டல்… சிக்கிய இந்திய நாட்டவர்
இதனை அடுத்து, சட்டவிரோதமாக பறவைகளுக்கு உணவளித்த குற்றத்திற்காக 59 வயதான அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) S$4,800 அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் வனவிலங்கு சட்டத்தின்கீழ் (Wildlife Act) புறா போன்ற பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு உணவளிப்பது சட்டவிரோதமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது சட்டம்.
அவர் ஒரு பையில் கொண்டு வந்த ரொட்டித் துண்டுகள் மற்றும் பச்சைப்பயறு ஆகியவற்றை புறாக்களுக்கு உணவாக கொடுத்த காட்சிகள் சிசிடிவி காணொளிகளில் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
வன விலங்குகளுக்கு உணவளித்ததாக அந்த பெண்மணி மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், அதில் நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

