சிங்கப்பூரில் பணிபுரிவது அதிக மனநிறைவை அளிப்பதாக அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் கூறியுள்ளனர்.
மனிதவள அமைச்சகம் (MOM) நடத்திய ஆய்வில் இந்த கருத்துக்கள் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் பணிபுரியும் புதுக்கோட்டை ஊழியர்… சொந்த வீட்டில் 89 சவரன் தங்க நகைகள் திருட்டு
கடந்த 2024 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பணிபுரிந்த 10 வெளிநாட்டு ஊழியர்களில் 9 பேர் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கை சூழல் மனநிறைவை அளிப்பதாக கூறியுள்ளனர்.
புள்ளிவிவரம்
2024 ஆம் ஆண்டில், 95.3% வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிவதிலும் வாழ்க்கை சூழலிலும் மனத் திருப்தி அடைவதாகக் கூறியுள்ளனர்.
இது 2018 ஆம் ஆண்டில் பதிவான 86.3 சதவீதத்தை விட அதிகம் ஆகும், மேலும் இது 2011 ஆம் ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்குப் பிறகு மிக உயர்ந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள்
அதே போல, 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகளிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 10 பேரில் 7 பேர் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் பண்புத் தரத்தில் மனநிறைவு அடைந்துள்ளனர்.
ஒர்க் பெர்மிட் புதுப்பிப்பு
ஊழியர்கள் தக்கவைப்பு விகிதத்தை பொறுத்தவரை, 4 இல் 3 முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களில் 80% க்கும் அதிகமானோரின் ஒர்க் பெர்மிட்ஸ் அனுமதிகளைப் புதுப்பித்து தருகின்றனர்.
சிங்கப்பூர் டோட்டோ.. முதல் பரிசு சுமார் 17 கோடி – வெற்றியை சுவைக்க கடும் போட்டி!
அதிக சம்பளம்
கூடுதலாக, சிங்கப்பூர் வேலை செய்ய ஓர் சிறந்த இடம் என்று 92.3% வெளிநாட்டு ஊழியர்கள் பரிந்துரைத்தனர், இது 2018 ஆம் ஆண்டில் 84.0% ஆக இருந்தது.
அதில் பதிலளித்தவர்களில் 84.4% பேர் குறிப்பிட்ட முக்கிய காரணம்; சிங்கப்பூரில் பாதுகாப்பாக பணிபுரிய ஏற்றச்சூழல் உள்ளது என்றும் அதைத் தொடர்ந்து அதிக சம்பளம் கிடைக்கும் (71.2%) என்றும் போதும் என்ற அளவுக்கு ஊழியர் பாதுகாப்பு (65.2%) ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மனிதவள அமைச்சகம் மீது அதிக நம்பிக்கை
ஒழுங்குமுறை சட்டவிதி நம்பிக்கையைப் பொறுத்தவரை, மனிதவள அமைச்சகம் (MOM) வெளிநாட்டு ஊழியர்களை பாதுகாப்பதில் சிறந்து விளங்குவதாக 97.0% பேர் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் அதே போல 97.0% வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலையிடம் பாதுகாப்பானவை என்று உணர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு 2,825 வெளிநாட்டு ஊழியர்களிடமும், அதே போல 2,212 ஊழியர்களின் முதலாளிகளிடமும் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை

