சிங்கப்பூரில் பணிபுரியும் புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியர் வீட்டில் 89 பவுன் தங்க நகைகள் மற்றும் 170கி வெள்ளியை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை அன்னச்சத்திரம் J.N நகரை சேர்ந்தவர் கதிரேசன் இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார்.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது
இவருக்கு திருமணமாகி கார்த்திகா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டைவிட்டு தனது சகோதரி மகன் பிறந்தநாள் விழாவுக்காக கார்த்திகா தன் குழந்தைகளுடன் பெங்களூரு சென்றதாக சொல்லப்படுகிறது.
பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு கார்த்திகா அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டினுள்ளே பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் ஆங்காங்கே சிதறியும் கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்
பின்னர் பீரோவை சோதித்ததில் அதில் வைக்கப்பட்டிருந்த 89 பவுன் தங்க நகைகள் மற்றும் 170கி வெள்ளி திருடப்பட்டது தெரியவந்தது.
மனமுடைந்த கார்த்திகா, பின்னர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.
வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆகிறது.
வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாரித்த பொருட்கள், நகைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. விழிப்புடன் இருங்கள்.
பாஸ்போர்ட் இப்படி இருந்தா கண்டிப்பா சிறை தான்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து சிக்கிய ஊழியர்

