சிங்கப்பூர்: தேசிய தின அணிவகுப்பை இந்த ஆண்டு பார்வையாளர்கள் மிக அருகில் இருந்து கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை ரசிகர்களை கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் திகைக்க வைக்க படைப்பாளிகள் பல மேடைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 300 படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இதில் 360 டிகிரி சுழற்றக்கூடிய உயரமான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நாளாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு தனது 59 பிறந்த நாளை கொண்டாடும் சிங்கப்பூர் ஏராளமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில் ராணுவ அணிவகுப்பு,வான வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அடங்கும்.

&w=1200&resize=1200,675&ssl=1)