சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தனது முதலாளியின் மருந்துச் சீட்டை அவரால் படிக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டிய உணவுகளை முன்கூட்டியே திட்ட மிட்டுக் கொடுப்பதாகவும், மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் நாட்களைக் குறித்து வைப்பதும் போன்ற பணிகளை வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே மிகத் திறமையாகக் கையாள்கிறார்.
அவரைப் போலவே இன்னும் பல வீட்டுப் பணிப்பெண்களும் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.
அவ்வாறு செய்பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்க முதலாளிகள் தயாராக உள்ளனர்.
இத்தகைய பராமரிப்பாளர்களுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

