சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த 2 பயணிகளிடம் உரிய ஆவணம் இல்லா ரூ35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானம்.. சோதனையில் பயணி கைது
தினமும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சொல்லப்பட்டுள்ளது.
அதே போல, இங்கு வந்து செல்லும் அனைத்து பயணிகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைப்பது வழக்கமான ஒன்று தான்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 25) புதன்கிழமை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ட்ரோன்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே, விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் அதிகாரிகள் கடுமையாக சோதனை செய்தனர்.

அதாவது பயணிகள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர்.
அப்போது இரண்டு பயணிகளின் பைகளில் அதிநவீன 35 ட்ரோன்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர், அவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன்களின் மதிப்பு ரூ35 லட்சம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கடத்தி கொண்டுவரப்பட்ட அதற்கு முறையான ஆவணம் இல்லை என்றும், அவை சீன தயாரிப்பு என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உரிய ஆவணம் இல்லா பொருட்கள் இவர்களிடம் வந்தது எப்படி? யார் கொடுத்து அனுப்பியது? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது

