சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர் வந்த பயணியிடம் சுமார் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளி நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்
கடத்தல் தங்கம், போதை பொருட்கள் போன்றவற்றை விமானம் மூலம் கொண்டு வருவதை தடுக்க அதிகாரிகள் பயணிகளிடம் கடுமையான சோதனை மேற்கொள்வது வழக்கம்.
அதே போல அவ்வப்போது தங்கம், போதைப்பொருள் போன்றவை பிடிபடுவதும் வழக்கமான நிகழ்வு தான்.

இந்நிலையில், கடந்த மே 22 ஆம் தேதி விமானம் ஒன்று சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கேரா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதித்தனர்.
அந்த சோதனையில் அவர் சுமார் 5 கோடி மதிப்பிலான க*ஞ்சா என்னும் போதைப்பொருளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, போதைப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள், ஆடவரையும் கைது செய்தனர்.
இது குறித்து ஆடவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் புளாக்கில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் பரிதாப மரணம் – மன அழுத்தம் காரணமா?

