Singapore Indians: சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த இந்திய பயணி ஒருவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீச்சல் குளத்தில் 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று (மே 16) அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
18 வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலி வேலை அனுமதி (Work pass)..
மானபங்கம்
இந்திய நாட்டைச் சேர்ந்த 25 வயதான பிரமேந்தர், சிறுமியை மானபங்கம் செய்ததாகவும், அநாகரீகமான நடக்க முயன்றதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தற்போது 13 வயதாகும் சிறுமியின் பெயர் மற்றும் விவரங்களை பாதுகாக்க தடை உத்தரவு இருப்பதால், அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
நீச்சல் குளம்
இந்த குற்றங்கள் கடந்த மார்ச் 31 அன்று ஜாலான் புசார் நீச்சல் குளத்தில் நடந்ததாக துணை அரசு வழக்கறிஞர் ஆஷ்லே சின் கூறினார், அங்கு சிறுமி தனது உறவினர்களுடன் சென்றுள்ளார்.
மாலை 6 மணியளவில் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறிய பிறகு, பிரமேந்தர் தன்னை முறைத்துப் பார்ப்பதை சிறுமி கவனித்தவாறே பெண்கள் கழிப்பறைக்கு நடந்து சென்றார், அதோடு விடாத பிரமேந்தர் சிறுமியை பின்தொடர்ந்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் கைது
இன்ஸ்டாகிராமில் தொடர சொல்லி தொல்லை
பின்னர், சிறுமியை பிடித்து இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடர கூறியுள்ளார் அவர். சிறுமை அதனை மறுக்க, தானாகவே சிறுமியின் கைப்பேசியைத் திறந்து, இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்ந்துள்ளார்.
அப்போது பிரமேந்தர் சிறுமியை ஒரு பக்கமாக அணைத்துக் கொண்டார், இதனால் சிறுமியின் உடலில் சுற்றியிருந்த துண்டு தோளில் இருந்து விலகியது, இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
கழிப்பறைக்குள் இழுக்க முயற்சி
இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார், அதனையும் பொருட்படுத்தாமல் பிரமேந்தர் சிறுமியை தன்னுடன் சேர்த்து பெண்கள் கழிப்பறைக்குள் வர கூறியுள்ளார்.
அதன் பின்னர் சிறுமியை வலுக்கட்டாக கழிப்பறைக்கு இழுக்க முயற்சி செய்துள்ளார், ஆனால் சிறுமி அதற்க்கு உடன்படவில்லை.
காவல்துறையில் புகார்
பின்னர் இது குறித்து அங்கிருந்த பாதுகாவலரிடம் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

