கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு கிருமி பரவல் மற்றும் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதும் கூட காரணமாக இருக்கலாம். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதால்
கடந்த சில நாட்களாகவே நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் மக்கள் அனைவரையும் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும், கிருமி பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு அரசு செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.எனவே மக்கள் கிருமி பரவலை கருத்தில் கொண்டு நோயினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தொடக்க கால கொரோனா பரவல் மக்களிடையே பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதால் உயிரிழப்பு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. நோயின் தீவிரமும் சற்று குறைந்து காணப்படுவதால் மக்கள் கவலையின்றி நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

