சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த பயணி ஒருவரை சர்வதேச விமான நிலைய குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர். ஷார்ஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதன் காரணமாக கோவை விமான நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிறைந்து வழியும்.
சாங்கி விமான நிலையத்தில் திருட்டு: 2 இந்திய நாட்டவர்கள் கைது
அது ஒருபுறம் இருக்க, பாங்காக்கிலிருந்து புறப்பட்ட விமானம் சிங்கப்பூர் வந்து பின்னர் கோவை விமான நிலையம் வந்தது.
இதனை அடுத்து விமானத்தில் இருந்த இறங்கிய பயணிகளை குடிநுழைவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர்.
அதில் ஒரு பெண் பயணி நடத்தையின் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் வர, அவரை அழைத்து விசாரித்து பின்னர் அவரின் உடமைகளை சோதனை செய்தனர்
அதில் இருந்த 6 நொறுக்கு தீனி பொட்டலத்தை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர், அப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அதன் உள்ளே நொறுக்கு தீனிக்கு பதிலாக சுமார் 3 கிலோக்கு மேல் கஞ்*சா என்னும் உயர் ரக போதைப்பொருளை பயணி மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
அதன் இந்திய மதிப்பு பல லட்சம் என்றும் அதிகாரிகளால் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அந்த பயணி கேரளாவை சேர்ந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர் பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வந்து இங்கிருந்து கோவை சென்றுள்ளார் எனவும், அந்த போதைப்பொருளை கேரளா கொண்டு செல்வது தான் அவரின் திட்டம் என்றும் அதிகாரிகளால் கூறப்படுகிறது.
இதில் யார்யார்க்கு தொடர்பு உள்ளது, அதனை கொடுத்து அனுப்பியது யார்? என்ற பல கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது

