இந்தச் சூழலில், தோனியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கிரிக்பஸ் தளத்தில் பேசிய ஜாகீர் கான், “தோனி வழக்கமாகச் செய்வது போல, இந்த இடைவேளைக் காலத்தை தனது உடல்நிலையைக் கண்காணிக்கப் பயன்படுத்துவார். சிஎஸ்கே அணி தற்போது இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அன்கேப்டு வீரர்களுக்கான இடங்களைப் பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.


