அடுத்த ஆண்டும் ஐபிஎல் போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஹசி, சூப்பர் கிங்ஸ் அகாடமியின் 12ஆவது வலைப் பயிற்சி மைதானத்தை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி20 உலகக் கோப்பை வெல்ல இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.
இதையும் படிக்க:
உலகக்கோப்பை டி20-யில் தொடக்க வீரராக களம் இறங்குவாரா கோலி?
அடுத்த ஆண்டும் ஐபிஎல் போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவர் என்றும் மைக்கேல் ஹசி தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
ரோஹித் சர்மா தலைமையிலான டி20 உலகக்கோப்பை அணியில், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)