சராசரி மனிதராக பிறந்த அனைவருமே நம்மிடம் ஏதாவது ஒரு செல்வாக்கு இருந்தால் நிச்சயமாக அதை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று நினைப்பது யதார்த்தமான ஒரு விஷயம்தான். ஆனால் மிகச் சிலரே அதனை நாம் பயன்படுத்தாமலேயே, சொந்த உழைப்பில் முன்னேறி, தனது திறன்களை பயன்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு செயல்படுவார்கள்.
இப்போது இந்த மாதிரியான நபர்களை நம்மால் அதிகம் பார்க்க முடிகிறது. சினிமா துறை, விளையாட்டு துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த நபர்களின் பிள்ளைகள் அவர்களது பெற்றோர்களின் உதவி இல்லாமல் சுயமாக முன்னேறி வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர் ’கிரிக்கெட் உலகின் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.
அவர்களின் மகளான சாரா டெண்டுல்கர் கிரிக்கெட் ஜாம்பவானாக பெயர் போன சச்சின் டெண்டுல்கரின் மகள் என்ற பெயரை பயன்படுத்திக்கொள்ளாமல் தன்னுடைய தனித்துவமான சாதனைகள் மூலமாக தனக்கான ஒரு தனி பயணத்தை செதுக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் 6.6 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களுடன் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவருடைய ஆன்லைன் ப்ரொபைல் சாரா டெண்டுல்கரின் வெற்றிகரமான வாழ்க்கையை நமக்கு காட்டுகிறது.
கிரிக்கெட் லெஜன்ட்டின் மகளாக பிறந்திருந்தாலும் கிரிக்கெட் மீதான அவருடைய தனிப்பட்ட காதலையும் அதே நேரத்தில் அவருக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கென தனிப்பட்ட ஆர்வங்களையும் சமநிலையாக வைப்பதில் சிறந்து விளங்குகிறார். Economic Times பத்திரிக்கையில் வெளியான தகவலின்படி, 2023ஆம் ஆண்டில் சாரா டெண்டல்கரின் மொத்த சொத்து மதிப்பு 50 லட்சங்கள் முதல் 1 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர் சாரா டெண்டுல்கர் ஷாப் என்ற பெயரில் ஆன்லைன் ஸ்டோர் ஒன்று நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் கொரிய அழகு பிராண்ட்டான Laneige-க்கு இந்திய அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் சாரா டெண்டுல்கரின் கல்வி பின்னணியும் அனைவரையும் வியக்க வைக்கிறது. இவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனிலிருந்து டிஸ்டின்க்ஷன் பெற்று மாஸ்டர் டிகிரியை முடித்துள்ளார்.
இதையும் படிக்க:
விவசாயிகளுக்கு விரைவில் ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கை!
2021ஆம் ஆண்டு ஃபேஷன் துறையில் கால் பதித்த இவர் தன்னுடைய நளினம் மூலமாக எக்கச்சக்கமான பார்வையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளார். கிரிக்கெட் உடனான அவருடைய தொடர்பு அவரின் அடையாளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தாலும் சாரா டெண்டுல்கர் தொடர்ந்து பல்வேறு புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து அதனை பயன்படுத்தி வருகிறார் என்பது பாராட்டத்தக்க விஷயமாக இருக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
