சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு முன்னறிவிப்பின்றி பல்வேறு கரன்சி நோட்டுகளை கொண்டு வந்ததாக நம்பப்படும் பயணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் காவல்துறையுடன் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
கடந்த வாரம் சாங்கி விமான நிலையத்தின் 4 முனையங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
10,000க்கும் மேற்பட்ட பயணிகளை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது 18,000க்கும் மேற்பட்ட ஹேண்ட் லக்கேஜ் மற்றும் சூட்கேஸ்கள் சோதனை செய்யப்பட்டன.
முன்னறிவிப்பின்றி பல்வேறு நாடுகளில் இருந்து 30,000 முதல் 35,000 வெள்ளி வரையிலான பணத்தை எடுத்த வந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

