சிங்கப்பூர்: சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் திருடியதாக இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான டூடி மான்சி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருடிய குற்றத்திற்காக அவருக்கு 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் ஜூலை 17ஆம் தேதி நடந்துள்ளது.
அவர் விமான நிலையத்தில் உள்ள கடையில் 20 வெள்ளி மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை திருடியுள்ளார்.
கடை உரிமையாளர் அழகு சாதன பொருள் திருடப்பட்டது குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார்.