சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் நுரையீரல் வீக்கத்தால் ஜெட்டாவின் அல் சலாம் அரண்மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 88 வயதான மன்னருக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி உள்ளது. ராயல் கிளினிக்குகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டின் ஏப்ரலில் மன்னர் சல்மான் வழக்கமான சோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. 2015 முதல் சவுதி அரேபியாவை மன்னர் சல்மான் ஆண்டு வருகிறார். அவரது மகன், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைவராக உள்ளார், இப்போது நாட்டின் நடப்பு விவகாரங்களைக் கவனித்து வருகிறார்.
இதையும் படிங்க : இந்தியா – மாலத்தீவுகள் மோதல் : 6 மாதங்களாக கல்லா கட்டும் இலங்கை!
பட்டத்து இளவரசர் MBS, மத்திய கிழக்கிற்கு வெளியே ஒரு பயணமாக, மே 20-23 ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்திக்க உள்ளார். ஞாயிற்றுக்கிழமை, MBS அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்து காசா மோதல் மற்றும் சவூதி-அமெரிக்க மூலோபாய ஒப்பந்தங்களை விவாதித்தார். இந்த ஒப்பந்தங்களில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை உருவாக்கும் சாத்தியம் அடங்கியுள்ளது.
இளவரசர் முகமது சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற 33வது அரபு உச்சி மாநாட்டில் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா உள்ளிட்ட பிராந்திய தலைவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
