Last Updated:
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்க செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தன் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருச்சியில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் குறித்து தவறான தகவல்களை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சித்தார்த் லூத்ரா, முகுல் ரோஹத்கி வாதிட்டனர். இதற்கு சவுக்கு சங்கர் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்ட நிலையில், தயவு செய்து சவுக்கு சங்கருக்கு அறிவுரை கூறுங்கள் என அவரது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கடிந்துகொண்டனர். தொடர்ந்து வாதிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நீதிபதிகள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் பற்றி சவுக்கு சங்கர் அவதுாறாக பேசி வருவதாகவும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரின் கோரிக்கையை ஏற்று கோவையில் பதியப்பட்ட முதன்மையான வழக்குகளுடன் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர். அதே சமயம், விசாரணையை தொடர்ந்து நடந்த எந்த தடையும் இல்லை என்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நிபந்தனைகளை சங்கர் மீறும் பட்சத்தில் மனு தாக்கல் செய்து உரிய உத்தரவுகளை தமிழக அரசு பெற்றுக்கொள்ள கூறி வழக்கை முடித்து வைத்தார்.
February 24, 2025 5:11 PM IST


