Last Updated:
சளி பிரச்சனையை சரிசெய்வதாக கூறி சிறுவனுக்கு சிகரெட் புகைக்க கற்றுத்தந்த உத்தரபிரதேச மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சளி தொல்லையால் அவதிப்பட்ட சிறுவனுக்கு சிகரெட் புகைக்க கற்றுக் கொடுத்த மருத்துவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜலோன் மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் சில நாட்களாக சளி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிறுவனின் பெற்றோர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் சுரேஷ் சந்திரா சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்து தான் சிறுவனின் சளி பிரச்சனையை சரிசெய்தவதாக கூறினார்.
அப்போது அச்சிறுவனை தனியாக அழைத்து சென்று சளித் தொல்லையை குணமாக்குவதாக கூறி சிறுவனுக்கு சிகரெட் புகைக்க கற்றுத்தந்தார். சிறுவனுக்கும் ஏதும் தெரியாமல் டாக்டர் தானே சொல்கிறார் என்று சிகரெட்டை வாங்கி புகைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் மருத்துவர் சுரேஷ் சந்திரா மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுவனுக்கு சிகரெட் புகைக்க கற்றுத்தந்த மருத்துவர் சுரேஷ் சந்திரா தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அவரை பணியிட மாற்றம் செய்து மருத்துவ உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளிடம் அமெரிக்க ஆயுதங்கள்?.. தலிபான் அமைப்பு விற்றதாக தகவல்!
சளி பிரச்சனையை சரிசெய்வதாக கூறி சிறுவனுக்கு சிகரெட் புகைக்க கற்றுதந்த மருத்துவரின் வீடியோ வெளியாகி தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், மேலும் இதுபோன்ற பயிற்சி இல்லாத மருத்துவர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்றும் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
April 19, 2025 3:29 PM IST
சளித் தொல்லையால் அவதிப்பட்ட சிறுவன்.. டாக்டர் கொடுத்த வித்தியாசமான ட்ரீட்மெண்ட்.. என்ன நடந்தது?


