வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் 6ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சர்வமத தலைவர்கள் அண்மையில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
‘பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் மகாவலி நிலைய ஹாமினி திஸாநாயக்க அரங்கில் இந்திய தூதரகத்தின் ஆலோசகர் எல்டோஸ் மத்யூ புன்னூஸ், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலக பதிவாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன ஆகியோர் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.
சமயங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பௌத்தமத குரு வண. கலகம தர்மரன்சி தேரர், இந்துமத குரு சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா, இல்லாமிய மத மௌலவி அல் ஹச் அல் சீக் ஹசன் மௌலானா, கிறிஸ்தவ மத குரு அருட்தந்தை நிஷான்குரே ஆகியோரே தமிழ் அபிவிருத்தி பேரவை சார்பாக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பி.பி.தேவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

