Last Updated:
3 இடங்களை நிரப்புவதற்காக துபாயில் நடந்த ஏலத்தில் அஸ்வின், ஷகிபுல் ஹசன், முகமது நபி, பெவுமா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
துபாயில் நடைபெறும் சர்வதேச லீக் 20 எனப்படும் ஐஎல்டி 20 தொடருக்கான ஏலத்தில் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனை எந்த அணியும் வாங்கவில்லை. இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்டவற்றில் இருந்து விலகிய அஸ்வின், இனி வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீப் போட்டிகளில் விளையாட போகிறேன் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் துபாயில் நடைபெறும் சர்வதேச லீக் 20 எனப்படும் ஐஎல்டி 20 தொடரில் விளையாட அஸ்வின் ஆர்வம் காட்டினார்.
தனது அடிப்படை விலையை 1 கோடியே 6 லட்சம் ரூபாய் என அஸ்வின் நிர்ணயித்திருந்தார். இது அந்த தொடரில் உள்ள ஒரு வீரருக்கு தரப்படும் அதிகப்படியான விலையாகும்.
இந்த நிலையில், 3 இடங்களை நிரப்புவதற்காக துபாயில் நடந்த ஏலத்தில் அஸ்வின், ஷகிபுல் ஹசன், முகமது நபி, பெவுமா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இதில் அஸ்வினை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை. ஒரு வேளை அஸ்வின் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக், பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார்.
October 01, 2025 10:58 PM IST


