Last Updated:
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் சரத் கமல் ஓய்வு பெற்றார்.
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான சென்னையைச் சேர்ந்த சரத் கமல் சக நாட்டைச் சேர்ந்த சினேகித் சுரஜுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்தப் போட்டியில் சினேகித் சுரஜுலா 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சரத் கமல் தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்த தொடருக்கு முன்னதாக சென்னையில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடருடன் ஓய்வு பெறுவதாக சரத் கமல் அறிவித்திருந்தார். அதன்படி, சரத் கமல் சர்வதேசப் போட்டியில் இருந்தும் விடைபெற்றார். எனினும், இத்தாலி வீரர் அமர் அசாருடன் காட்சிப் போட்டி ஒன்றில் சரத் கமல் விளையாடினார். இந்த ஆட்டம் அவருக்கு பிரியாவிடை போட்டியாக அமைந்தது.
இதையும் படிக்க: IPL 2025 : வெற்றிக்கு மீண்டும் திரும்புமா சிஎஸ்கே? முதல் வெற்றிக்கு காத்திருக்கும் ஆர்ஆர்.. பரபரக்கும் ஐபிஎல்
காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள சரத் கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று அசத்தினார். விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சரத் கமலுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
March 30, 2025 2:38 PM IST


