சர்வதேச அளவில் எப்ஸ்டீன் விவகாரம் மனித உரிமை மீறல்கள் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், உள்ளூர் மட்டத்திலும் கடந்த கால மர்மங்கள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது.
அதாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஆயிரக்கணக்கான கண்கள் தானமாக வழங்கப்பட்ட வரலாற்றுத் தரவுகள், தற்போது பல்வேறு கோணங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை இன்னும் வெளிவராத நிலையில், இத்தகைய பாரிய அளவிலான உறுப்பு தானங்கள் குறித்த கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
முறையான விசாரணைகள் இல்லாத காரணத்தினால், அந்தக் கண்கள் எங்கிருந்து பெறப்பட்டன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இதற்கும் தொடர்புள்ளதா போன்ற அச்சங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மத்தியில் நீங்காத வடுவாக உள்ளன.
இந்தநிலையில், தற்போது சர்வதேச ரீதியாக எப்ஸ்டீன் விவகாரம் பாரிய அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில், அன்று சீனாவிற்கு வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கண் தானங்கள் குறித்தும், அதே காலகட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் சிறுவர்களின் மர்மமான நிலை குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
