• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சரக்கு ரயில் மீது புறநகர் ரயில் மோதி கோர விபத்து.. 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சரக்கு ரயில் மீது புறநகர் ரயில் மோதி கோர விபத்து.. 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 05, 2025 7:31 AM IST

சத்தீஸ்கர் Gevra அருகே புறநகர் ரயில் சரக்கு ரயிலில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 15 பேர் காயம். ரயில்வே நிவாரணம் அறிவிப்பு, விஷ்னு தியோ சாய் நடவடிக்கை.

சரக்கு ரயில்  விபத்து
சரக்கு ரயில் விபத்து

சத்தீஸ்கரில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்புறமாக புறநகர் ரயில் மோதிய விபத்தில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கவனக்குறைவுடன் புறநகர் ரயில் சிக்னலை கடந்துசென்றதே விபத்துக்கான காரணம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஸ்கரின் கொர்பா மாவட்டத்தில் உள்ள Gevra ரயில் நிலையத்தில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தது. பிலாஸ்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே Gatora பகுதியில் ரயில் வந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் நின்றிருந்த சரக்கு ரயிலின் கடைசி பெட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

சரக்கு ரயில் மீது மோதிய வேகத்தில் புறநகர் ரயிலின் என்ஜின் மற்றும் முதல் பெட்டியில் கடும் சேதம் ஏற்பட்டு, அதில் அமர்ந்திருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்புப் படையினர், உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்ததால், அந்த தண்டவாளத்தில் சிவப்பு நிற சிக்னல் போடப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காமல் புறநகர் ரயிலை என்ஜின் ஓட்டுநர் ஓட்டியது தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரயில்வே தரப்பில் தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், லேசான காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றதால் மும்பை – ஹவுரா இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்னு தியோ சாய், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 05, 2025 7:31 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

சரக்கு ரயில் மீது புறநகர் ரயில் மோதி கோர விபத்து.. 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன?

Read More

Previous Post

கனடாவின் வரலாற்று வெற்றி …! நகராட்சி உறுப்பினராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்

Next Post

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை: இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜிதேஷ் கேப்டனாக நியமனம் | India squad for Rising Star Asia Cup announced: Jitesh Sharma named captain

Next Post
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை: இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜிதேஷ் கேப்டனாக நியமனம் | India squad for Rising Star Asia Cup announced: Jitesh Sharma named captain

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை: இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜிதேஷ் கேப்டனாக நியமனம் | India squad for Rising Star Asia Cup announced: Jitesh Sharma named captain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin