• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சமிஞ்சை விளக்கை மீறிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் காரின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சமிஞ்சை விளக்கை மீறிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் காரின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுங்கைப்பட்டாணி, பண்டார் ஶ்ரீ செண்டானா சந்திப்பில் சிகப்பு விளக்கை மீறிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் காரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை 8.40 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 48 வயதான வான் முகமது ஷம்சுரி வான் சம்சுதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார் என கோல மூடா காவல் துறை உதவி ஆணையர் ஹன்யான் ராம்லான் தெரிவித்தார். 20 வயதுகளில் உள்ள ஒரு பெண் ஓட்டி வந்த கார், சிகப்பு விளக்கில் நிற்கத் தவறி, பின்னர் வலதுபுறம் திரும்பி மோட்டார் சைக்கிளின் பாதையில் குறுக்கிட்டதாக நம்பப்படுகிறது.

நேராகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், காரின் இடது பக்கத்தில் மோதியது. சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார் என்று அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதே மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான டாஷ்போர்டு கேமரா காட்சிகள் அல்லது வேறு ஏதேனும் பதிவுகள் வைத்திருக்கும் சாலைப் பயனாளர்கள், விசாரணைக்கு உதவுவதற்காக அவற்றை முன்வந்து காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பானது என்று நம்பப்படும், சமூக ஊடகங்களில் பரவிவரும் மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) காட்சிகளில், ஒரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்த சிவப்பு நிறக் காரின் மீது மோதுவதற்கு முன்பு, நேராகச் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் தெரிவது பதிவாகியுள்ளது.



Read More

Previous Post

US IRAN war : அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னும் போர் ஏன்? – பின்னணியில் இஸ்ரேல்? | Decode

Next Post

16 ஆண்டு கால வழக்கு: நான்கு பேர் படுகொலை வழக்கில் சந்தேகநபர் விடுதலை

Next Post
16 ஆண்டு கால வழக்கு: நான்கு பேர் படுகொலை வழக்கில் சந்தேகநபர் விடுதலை

16 ஆண்டு கால வழக்கு: நான்கு பேர் படுகொலை வழக்கில் சந்தேகநபர் விடுதலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin