கோத்தா கினபாலு, பிப்ரவரி 22, 2026 :
சபாவில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 5,141 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இது 4,761 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்களின் அடிப்படையில்,
தற்போது சபாவின் நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,160 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 27 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக அதிகமானோர் பித்தாஸில் (Pitas) 2,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கோத்தா மருதுவில் (Kota Marudu) 1,929 பேரும், பைத்தான் மாவட்டத்தில் (Paitan): 847 பேரும், தாவாவில் (Tawau): 245 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையினால் நேற்று இரவு 11:30 மணியளவில் தாவாவ் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுவே தற்போது கடைசியாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும்.
இந்த நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 80 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக, இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The post சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

