Last Updated:
காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஓம் பிர்லா அறைக்குள் நுழைந்து மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக கிரண் ரிஜிஜு வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அத்துமீறி நுழைந்து திட்டியதுடன் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வீடியோ வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், சுமார் 20-25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டது பதிவாகி உள்ளதாக எக்ஸ் பதிவில் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் உரையாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அவரின் இருக்கைக்கு அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
This is the illegal video clip taken by a Congress MP when 20-25 Congress MPs entered the Chamber of Hon’ble Speaker, abused him and threatened Honb’le Prime Minister. Our party believes in debate & discussion and never encourage MPs to threaten physically. https://t.co/bezzALc7D3 pic.twitter.com/iM0a50Z4rg
— Kiren Rijiju (@KirenRijiju) February 12, 2026
பாஜக விவாதங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டது என்றும், வன்முறையையோ அல்லது மிரட்டல்களையோ ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தாம் அமைதியாக அமர்ந்திருந்ததாகவும் அமைதியான முறையில் கருத்துகளை கூறியதாகவும் பிரியங்கா காந்தி விவரித்தார்.
Feb 12, 2026 10:06 PM IST
சபாநாயகர் அறைக்குள் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நுழைந்து மிரட்டல் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ பரபரப்பு


