Last Updated:
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் என்ஐஏ விசாரணை நடத்தியது. 15 பேர் சந்தேகத்தில். பரூக் அகமது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் என்ஐஏ விசாரணை நடத்தியது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில், கடந்த 22ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியதில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க பிரதமரும், உயர் அதிகாரிகளும் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் உள்ளே நுழைய உதவியவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்த நிலையில், அவர்களில் 15 பேர் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் தேடப்பட்டு வரும் தீவிரவாதியான பரூக் அகமது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வந்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய பரூக் அகமது உதவி இருக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் பைசபன் பகுதிக்கு சென்று என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு 3D MAPPING தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தீவிரவாதிகள் எப்படி நுழைந்தனர் என்பது குறித்து அங்கு ஆய்வு நடத்தினர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 30, 2025 1:42 PM IST


