
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மிகவும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளன. விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மிகவும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளன. விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி முறை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது.
வழக்கமாக மாலை 6 மணிக்கே தொடங்க வேண்டிய பயிற்சி நேரத்தை மாற்றியமைத்த வீரர்கள், மாலை 6.47 மணிக்கு சந்திர கிரகணம் முழுமையாக நிறைவடைந்த பின்னரே மைதானத்திற்கு வந்தனர். இரவு 7 மணி முதல் அவர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மற்றும் கலாச்சார நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த ‘சென்டிமென்ட்’ முடிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, நாக்-அவுட் சுற்றில் எவ்வித பின்னடைவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் வீரர்கள் உறுதியாக உள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய அதே வேகத்துடன், நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி தயாராகி வருகிறது.

