தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் இடைக்கால ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையை வகுத்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையால், கவிதாவுக்குச் சொந்தமான சவுத் குரூப் நிறுவனம் ஆதாயம் பெற்றதாக புகார் எழுந்தது. அதுமட்டுமன்றி ஆம் ஆத்மி கட்சிக்கு, கவிதாவின் நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்கியதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பாக ஹைதரபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கடந்த மாதம் 15 ஆம் தேதி கைது செய்தது.
இந்த நிலையில் தனது 16 வயது மகன் பள்ளி ஆண்டு இறுதி தேர்வு எழுதுவதால் அவருடன் இருக்கும் வகையில் இடைக்கால ஜாமின் கோரி கவிதா டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கவிதாவின் இடைக்கால ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)