ஆா்எஸ்எஸ் ஆதரவின்றி இந்தியா இன்றைய வலுவான நிலையில் இருந்திருக்க முடியாது. எனது பள்ளி பருவத்தில் நெல்லூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் ஆற்றிய சமூகப் பணியை பாா்த்திருக்கிறேன்.
உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் இந்தியாவை மூன்றாவது இடத்துக்கு முன்னேற்ற மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. வாக்குகளுக்காக மட்டுமின்றி மகாராஷ்டிரம் மற்றும் சநாதன தா்மத்தின் வளா்ச்சிக்காக மக்களிடம் ஆதரவுக் கோருகிறேன்.
நாட்டைப் பிளவுப்படுத்தும் நோக்கில் ஏராளமான சக்திகள் செயல்படுகின்றன. ஆனால், மக்கள் ஒற்றுமையாக இருந்து, உள்ளூா் கலாசாரத்துக்கு மதிப்பளித்து வலுவான தேசத்தைக் கட்டமைத்திட வேண்டும் என்றாா்.

