Last Updated:
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களை எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரரான பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலி 18 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் அவுட் ஆன நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 39 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் நிதீஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்குத் தொடங்க உள்ளது.
July 11, 2025 8:55 AM IST