புது தில்லி: தில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 92 பேர் நேற்று(ஜூன் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள், 22 பெண்கள் , 24 சிறுவர்கள், 15 சிறுமிகள் அடங்குவர். மங்கல்பூரியில் ரயில்வே பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையால் நிகழாண்டில் மட்டும் 242 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இன்று(ஜூன் 10) தெரிவித்தனர்.

