• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சட்டவிரோத தொழிலாளர்களைப் பணிக்கமர்த்திய 20 முதலாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு: 6 லட்சம் ரிங்கிட் அபராதம்!

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
சட்டவிரோத தொழிலாளர்களைப் பணிக்கமர்த்திய 20 முதலாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு: 6 லட்சம் ரிங்கிட் அபராதம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

திரெங்கானு மாநிலத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலத்தில் நடத்தப்பட்ட 334 தீவிரச் சோதனைகளில், மொத்தம் 4,884 வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்டு, அவர்களில் 1,257 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 522 பேர் முறையான பயண ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் ஏதுமின்றி தங்கியிருந்ததால், குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று, திரெங்கானு மாநில இமிக்கிரேஷன் துறை (JIM) இயக்குநர் முகமட் யுஸ்ரி முகமட் நோர் கூறினார்.

அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாகத் தங்கியிருந்ததற்காக பிரிவு 15(4)-இன் கீழ் 317 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அனுமதிப் பத்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக விதிமுறை 39(b)-இன் கீழ் 372 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் வேறு குற்றங்களுக்கு 46 பேர் பிற குடிநுழைவு மீறல்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.

கட்டுமான இடங்கள், வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தும் வீடுகள், வணிக வளாகங்கள், தோட்டம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் போன்ற ஆபத்து நிறைந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு தேசியப் பாதுகாப்பு துறை, உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மலேசியக் காவல் துறை (PDRM) ஆகியவற்றுடன் இணைந்து இச்சோதனைகள் நடத்தப்பட்டன.

இக்கால கட்டத்தில் குடிநுழைவுத் துறை மொத்தம் 207 விசாரணை அறிக்கைகளைத் திறந்து, RM2.887 மில்லியன் தொகையைக் கூட்டு அபராதமாகப் (Compound) பெற்றுள்ளது.

மேலும், 707 சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பணியமர்த்திய 20 முதலாளிகள் உட்பட மொத்தம் 727 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, RM602,000 அபராதம் விதிக்கப்பட்டது.

The post சட்டவிரோத தொழிலாளர்களைப் பணிக்கமர்த்திய 20 முதலாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு: 6 லட்சம் ரிங்கிட் அபராதம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல்; பதிலடி எச்சரிக்கை|US Strikes Iran Again; Tehran Warns of Retaliation

Next Post

கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம் – Sri Lanka Tamil News

Next Post
கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம் – Sri Lanka Tamil News

கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin