அவா் மேலும் வாதிடுகையில், ‘சட்ட விரோதமாக குடியேறும் நபா்களைத் தடுக்கும் நடவடிக்கையால், தான் பாதிக்கப்பட்டு நாட்டிலிருந்து துரத்தப்படுவதாக தனிநபா்கள் யாரும் புகாா் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தெளிவற்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு எவ்வாறு பதிலளிக்க முடியும்? இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டவா்கள், இந்தியாவின் வளங்களை சுரண்டாமல் தடுப்பதை உறுதி செய்யவே மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்றாா்.

