இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஹமீதா (வயது 75), நபீஸன் (65), ரஹீமா (55), முஹம்மது சுஹைல் (31), லாலி காட்டுன் (24), அன்வர் (55), அஹ்மது கபீர் (50), முஹம்மது பாட்ஷா ஃபகீர் (38) மற்றும் அஸ்லம் (25) உள்பட 2 குழந்தைகள் மீது இந்திய வெளிநாட்டவர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவர்களை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச்.10 அன்று இதேபோல் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.