பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “சத்ரபதி சிவாஜியின் மண்ணில் இருந்து சொல்கிறேன். ராகுலால் மட்டுமல்ல, அவரின் நான்காம் தலைமுறையால்கூட சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது” என்றார்.
ராகுல் காந்தி அரசியலமைப்பையும், அம்பேத்கரையும், அவரை தேர்தெடுத்த மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் இடஒதுக்கீடு வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். மோடி அரசு இருக்கும் வரை யாராலும் அரசியலமைப்பு மீது கைவைக்கமுடியாது. எஸ்சி, எஸ்டி, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் இருந்தபடியே இருக்கும்” என்றார்.
மகராஷ்டிரத்தில் நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், நவம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

&w=1200&resize=1200,675&ssl=1)