அக்குரகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி கொலை தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபர், மாலைதீவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (04) பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக அவர் மேற்கு தெற்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

