உலகக்கோப்பை டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இருவரும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்களாக இருந்துள்ளனர். உலகக்கோப்பை தொடரில் இவ்விரு வீரர்களின் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளார்கள்.
ஆடும் 11 வீரர்களில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த்தும், பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனும் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. இருவரில் யார் பெஸ்ட் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதுபற்றி மனதில் பட்டதை விபரமாக கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர்.
தற்போது கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் மிடில் ஆர்டரிலும், சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரிலும் விளையாடி ரன்களை குவித்துள்ளனர். இது இந்திய அணிக்கு பலம் அளிக்கும் விஷயம்.
உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பந்த் மிடில் ஆர்டரில் விளையாடினால் இந்திய அணி கூடுதல் ரன்களை குவிக்க முடியும். ரிஷப் பந்த் 4, 5 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கலாம். ரிஷப் பந்த்தை இந்திய அணிக்கு தேர்வு செய்ததில் எந்த அழுத்தமும் கிடையாது. அவரது திறமையின் அடிப்படையில் தேர்வாகியுள்ளார்.
இதையும் படிங்க – சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் – ரகசியம் உடைத்த மைக்கேல் ஹசி
சஞ்சு சாம்சனால் ஃபினிஷிங் சிறப்பாக செய்ய முடியும் என்றால், அதையும் நாம் முயற்சித்து பார்க்கலாம். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் என யார் விளையாடினாலும் அவர்களுக்கு நாம் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தற்போது வரை சஞ்சு சாம்சன் 12 போட்டிகளில் 486 ரன்களும், ரிஷப் பந்த் 13 போட்டிகளில் 446 ரன்களும் எடுத்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)