Last Updated:
2027 சீசன் முதல் அவரை சென்னை அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. அதன் பின்னணி குறித்த தகவல்கள் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
சஞ்சு சாம்சன் இன்று தனது 30ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக சஞ்சு சாம்சனை சென்னை அணி ட்ரேடிங் முறையில் வாங்கவுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் பரவின.
ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் அணியில் இணைந்தால், 2027 சீசன் முதல் அவரை சென்னை அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சாம்சன், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தான் ராயல்ஸின் முகமாக விளங்கி, அணியின் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 2021-ல் கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர், 2024-ல் தனது சிறந்த சீசனைப் பதிவு செய்தார்.
இருப்பினும், 2025 சீசனுக்குப் பிறகு அணியில் இருந்து மாற்றம் வேண்டும் என்று அவர் நிர்வாகத்திடம் தெரிவித்ததால், இந்த வர்த்தக முயற்சிகள் தொடங்கப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சாம்சனுக்கு ஈடாக CSK அணியின் ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
November 11, 2025 3:25 PM IST


