Last Updated:
இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த செயலி மூலம் நிதி மோசடிகளை தடுக்கவும், வாட்ஸ் அப் , டெலிகிராம் உள்ளிட்டவை மூலம் பெறப்படும் தவறான லிங்குகள் மூலம் நடைபெறும் மோசடி , ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும் என மத்திய அரசு கூறியிருந்தது. மேலும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மொபைல் ஃபோன்களுக்கு IOS அப்டேட் செய்யப்படும்போது குறிப்பிட்ட செயலி கட்டாயம் இடம்பெற வைக்க வேண்டும் என்றும் செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
ஆனால், குறிப்பிட்ட செயலியின் மூலம் நாட்டு மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், மத்திய அரசு அதன் முடிவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், சஞ்சார் சாத்தி செயலியை இதுவரை 1.4 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
December 03, 2025 5:16 PM IST


